பாவம் தேங்கிய நீரும்!
மழை தன் சிறகுகளை
சுருக்கிக்கொண்ட
முன்மாலைப்பொழுது!
சிவப்பேறிய செம்மண்
சாலையில் திட்டுத்திட்டாக
மழைநீர் தேங்கல்கள்!
அவள்
பஞ்சுப்பாதங்களும்
பட்டுப்பாவாடையும்
நனையாதவாறு
தாண்டித் தாண்டி
நடந்து போனாள்!
எனக்குத்தான்
பாவமாக இருந்தது
தேங்கிய நீரை பார்க்க..!
No comments:
Post a Comment