November 9, 2009

பாவம் தேங்கிய நீரும்!



மழை தன் சிறகுகளை
சுருக்கிக்கொண்ட
முன்மாலைப்பொழுது!

சிவப்பேறிய செம்மண்
சாலையில் திட்டுத்திட்டாக
மழைநீர் தேங்கல்கள்!

அவள்
பஞ்சுப்பாதங்களும்
பட்டுப்பாவாடையும்
நனையாதவாறு
தாண்டித் தாண்டி
நடந்து போனாள்!

எனக்குத்தான்
பாவமாக இருந்தது
தேங்கிய நீரை பார்க்க..!

No comments:

Post a Comment