October 8, 2009

என் வீடு

நீ வந்துபோன
வாசத்தை வைத்திருந்த
நந்தவனம்!

நீ பேசிப்போன
வார்த்தைகளை
பதிந்து வைத்திருக்கும்
இசைத்தட்டு!

உன் ஆக்ரமிப்பை
அனுமதித்த
போர்க்களம்!

உன் குறும்புகளின்
அடையாளங்களை
தாங்கி நிற்கும்
அருங்காட்சியகம்!

உன் கண்ணீரையும்
என் கண்ணீரையும்
தாங்கிக்கொண்ட
தலையணை!

No comments:

Post a Comment