July 2, 2011

நீதான்!!!


தோட்டத்தில் இருக்கும்போது
மதிலுக்குப் பின்னாலிருந்து
வந்து விழும் ஒற்றை
மல்லிகை !

நான் வீட்டில் இருந்தால்
மட்டும் அடிக்கடி வரும்
ஒற்றை தொலைபேசி ஒலி!

அதிகாலை நான்கு மணிக்கு
ஊருக்கு சென்றாலும்
நம் தெருவில் உன் வீட்டில்
மட்டும் எரியும் வாசல்விளக்கு!

அனுப்புவோர் முகவரியும் இல்லாமல்
வார்த்தைகளும் இல்லாமல்
என் பெயருக்கு 
வரும் வெற்று கடிதங்கள்!

என் வீட்டு வார இதழ்களில்
எங்காவது என் பெயர்
தென்பட்டால் அதைச்சுற்றி
இருக்கும் சிகப்பு வட்டம்!

அடிக்கடி காணாமல் போகும்
என் புகைப்படங்கள்!

இதற்க்கெல்லாம் காரணம்
நீதான் என்று அறியவே
எனக்கு நீண்ட நாளானது !

No comments:

Post a Comment